என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பல்லடத்தில் இன்று சிக்னல் கம்பத்தின் மீது ஏறி கீழே குதிக்க முயன்ற வாலிபர்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நால்ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இன்று காலை திடீரென அங்கு வந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த சிக்னல் கம்பத்தின் மீது ஏறி கீழே குதிக்க போவதாக கூறினார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த வட மாநில வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார்.
பின்னர் சாதுர்யமாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த வழியாக வந்த லாரியை சிக்னல் அருகே நிறுத்தி, அதன் மேல் ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டனர். பின்னர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரது ஊர், பெயர் விவரம், எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்