search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆற்காட்டில் நிதி நிறுவனத்தில் டி.வி, பணம் திருட்டு

    ஆற்காட்டில் நிதி நிறுவனத்தில் டி.வி, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் ஆற்காடு அண்ணா சிலை பகுதியில் வேலூர் மெயின் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நிதி நிறுவனத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் நிதி நிறுவனத்தை ஊழியர் ஒருவர் திறக்க வந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்தது. 

    இதுகுறித்து ஊழியர், நிதி நிறுவன உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். நிதி நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது நிதி நிறுவனத்தில் இருந்த டி.வி, கடிகாரம் மற்றும் மேஜையின் டிராயரை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை மர்மநபர் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் தொடங்கியது. போலீசார் ரோந்துப்பணியில் இருந்தபோதே மெயின் ரோட்டில் இருந்த நிதி நிறுவன கதவு பூட்டை உடைத்து திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×