என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி - டெல்டாவில், ஒரே நாளில் 424 பேருக்கு தொற்று
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 160 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 21 ஆயிரத்து 392 பேர் குணம் அடைந்துள்ளனர். தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டியும் 69 வயது முதியவரும் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 114 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 393 ஆக உயர்நதுள்ளது. 146 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 10 ஆயிரத்து 15 பேர் குணம் அடைந்துள்ளனர். நாகை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவரும், 30 வயது பெண்ணும் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்நதுள்ளது. தற்போது 1,218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது. 94 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 12 ஆயிரத்து 799 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்