search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

    தங்க நகை திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான கொள்ளையனின் கைரேகை பதிவை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    ஆவடி:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் வர்கீஸ் (வயது 64). இவர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டார்.

    இவருடைய மகன் பெஞ்சமின் மட்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மரக்கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டது தெரிந்தது.

    இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான கொள்ளையனின் கைரேகை பதிவை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×