என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் உயிரிழப்பு
Byமாலை மலர்20 April 2021 10:27 AM GMT (Updated: 20 April 2021 10:27 AM GMT)
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகர், சித்தர் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் கிருஷ்ணகாந்த்(வயது 16). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் வெங்கடேசபிரசாத்தும் (21) நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணகாந்தும், வெங்கடேசபிரசாத்தும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணகாந்த் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடபிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகர், சித்தர் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் கிருஷ்ணகாந்த்(வயது 16). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் வெங்கடேசபிரசாத்தும் (21) நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணகாந்தும், வெங்கடேசபிரசாத்தும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணகாந்த் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடபிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X