search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று

    கரூர் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நொய்யல் பகுதியை சேர்ந்த 20 வயது ஆண், தாந்தோணி மலையை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் 15 வயது பெண், 40 வயது ஆண், கரைபட்டியைச் சேர்ந்த 56 வயது பெண், தென்னிலையை சேர்ந்த 62 வயது மூதாட்டி, காந்தி கிராமத்தைச் சேர்ந்த 48 வயது ஆண்.

    அரவக்குறிச்சியை சேர்ந்த 1 வயது பெண் குழந்தை, 65 வயது மூதாட்டி, காந்தி கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண், பசுபதி பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் 23 வயது வாலிபர், பாலாஜி நகரை சேர்ந்த 40 வயது பெண், 50 வயது ஆண் உள்பட 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருபுறம் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதிகளவில் கொரோனா பரவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    Next Story
    ×