என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்19 April 2021 5:05 PM GMT (Updated: 19 April 2021 5:05 PM GMT)
திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக் கட்டியில் சாலைகள் அகலப்படுத்தி புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக விட்டுகட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வாய்க்கால் மற்றும் பாலத்தை அகலப்படுத்தும் பணிக்காக அந்த பகுதியில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நேற்று நடந்தது.
இந்த பணியில் தர்மபுரி மாவட்டம் தாசனபட்டியை சேர்ந்த மணி மகன் செந்தில்(வயது 34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலு மகன் தமிழ்ச்செல்வம்(28) இருவரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உயர்கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள ‘ரோப்’ மூலம் கட்டி மேலே தூக்கினர்.
அப்போது மின்கம்பத்தை கட்டி மேலே தூக்கிய ‘ரோப்’ அறுந்து மின்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரோடு பணியில் இருந்த தமிழ்ச்செல்வத்தை சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி பலியான செந்தில் உடலை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ குகன், தேவதாஸ் ஆகியோர் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X