search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    2 வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம்.

    அவினாசி அருகே 2 வீடுகளில் 8½ பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

    அவினாசி அருகே அடுத்தடுத்து 2 டிரைவர்கள் வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை, மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    அவினாசி:

    அவினாசி அருகே உள்ள கருவலூர் நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தங்கராஜ் தனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டில் ரங்கசாமி (43) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர்.

    பின்னர் நேற்று மாலை வந்து பார்த்தபோது இருவரது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீ்ட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது தங்கராஜ் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அதே போல் ரங்கசாமி வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்து 2½ பவுன் தங்க நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் ஆகியவைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவினாசி அருகே அடுத்தடுத்து வீடுகளில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம், மற்றும் நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×