என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடுகளை சுற்றிலும் தேங்கி கிடக்கும் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
Byமாலை மலர்18 April 2021 5:01 PM GMT (Updated: 18 April 2021 5:01 PM GMT)
கோவில்பட்டியில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி பகுதியான ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த பகுதியில் உள்ள வீடுகளை மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சூழ்ந்து நிற்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில்பட்டியில் பெய்த மழை காரணமாக ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த தண்ணீர் வழியாக சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனை கண்டித்து நேற்று மாலை கோவில்பட்டி கடலையூர் சாலையில் லாயல்மில் காலனி விலக்கு பகுதியில் அப்பகுதி மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராமையா நகர், திருமால் நகர், கணேஷ் நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. 2 நாட்களாக பெய்த மழையில் சுமார் 2 அடி உயரத்துக்கு வீடுகளை சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயன் இல்லை. எங்களது வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதற்கு காரணம் எட்டயபுரம் சாலையில் உள்ள குறிஞ்சாங்குளம் கண்மாயை சரிவர தூர்வாராதது தான். மேலும் கண்மாய் அருகே திட்டங்குளத்துக்கு செல்லும் மறுகால் ஓடையும் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குறிஞ்சாங்குளம் கண்மாயை தூர்வாரி, மறுகால் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X