search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X
    வாலிபர் தற்கொலை

    கோவில்பாளையம் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

    கோவில்பாளையம் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவில்பாளையம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அனில்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த சில வருடங்களாக தனது வீட்டின் அருகே வசித்து வந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை அந்த பெண்ணை சந்தித்து தெரிவித்தார். ஆனால் பெண் ஏற்க மறுத்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக அனில்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்..

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 24). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த ஜெயக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 36). கைத்தறி தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக மகேஸ்வரன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மகேஸ்வரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளலூரை சேர்ந்தவர் மூர்த்தி (41). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் சிறுமுகை அருகே உள்ள மூலத்துறை பவானி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×