search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் திடீர் மாயம்

    நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம், ஆர்.சி.கோவில் தெருவை சேர்ந்தவர் அமர்நாத். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி உள்ளார்.

    அங்கிருந்த பிரியதர்ஷினி இரவில் திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் முத்துலெட்சுமி தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலைச்செல்வி. மாரிமுத்து வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போதுதான் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த கலைச்செல்வியை திடீரென்று காணவில்லை.

    இதுகுறித்து மாரிமுத்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×