என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உறவினர் கொரோனாவால் பாதிப்பு: தொற்று பயத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்17 April 2021 10:22 AM GMT
பாளையங்கோட்டை அருகே உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனக்கும் தொற்று இருக்குமோ? என்ற பயத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூரைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி கோமதி (வயது 74). இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கோமதியின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் கோமதி தனக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்று அஞ்சினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் கோமதி திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மதியம் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X