என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை
Byமாலை மலர்16 April 2021 11:48 PM GMT (Updated: 16 April 2021 11:48 PM GMT)
திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த 2 நாட்களாக லேசான தூறல் மழை மட்டுமே பெய்தது. கனத்த மழை பெய்யவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ராமர் மட தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியது. குறிப்பாக புதிய பஸ் நிலைய பகுதியில் மழைநீர் ஏராளமாக தேங்கியது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில் மழை நீர் உள்ளே புகுந்தது. இதனால் பூமாலை வணிக வளாகம் குளம் போல காட்சி அளிக்கிறது.
திடீரென பெய்த இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X