என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் பலத்த மழை
Byமாலை மலர்16 April 2021 10:40 PM GMT (Updated: 16 April 2021 10:42 PM GMT)
நெல்லையில் நேற்று வழக்கம்போல் காலையில் இருந்து மதியம் வரையிலும் வெயில் வாட்டியது. மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லையில் நேற்று வழக்கம்போல் காலையில் இருந்து மதியம் வரையிலும் வெயில் வாட்டியது. பிற்பகலில் வானத்தில் மேகங்கள் திரண்டதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-10, சேர்வலாறு-3, கொடுமுடியாறு-7.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X