search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சமயபுரம் அருகே தார் விற்பனையாளர் படுகொலை

    சமயபுரம் அருகே தார் விற்பனையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சமயபுரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிபகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் கடந்த 15 வருடங்களாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் என்ற பகுதியில் தனியாக வீடு கட்டி குடியிருந்து வந்தார். மேலும், இவர் மொத்தமாக தார் வாங்கி சாலை போடும் ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் இறந்து கிடப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் குளியலறையில் நிர்வாண நிலையில், அவருடைய மர்ம உறுப்பு அறுக்கப்பட்டும், கழுத்து மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை மோப்பம் பிடித்தபடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார். தொழில்போட்டி காரணமாக அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாண்டியனுக்கு திருமணமாகி எழிலரசி (வயது 42) என்ற மனைவியும், ஒருமகளும், மகனும் உள்ளனர்.
    Next Story
    ×