search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை உள்பட 96 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை, கால்நடை மருத்துவர், நகராட்சி உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் உள்பட 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தலைமை ஆசிரியை உள்பட 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,832 ஆக உயர்ந்து உள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,736 ஆக குறைந்தது.

    இதற்கிடையே நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை, கால்நடை மருத்துவர், நகராட்சி உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் உள்பட 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,832 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 56 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இந்த மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 187 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 534 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×