search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

    கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் நாராயணாபுரத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுடலைமணி (வயது 32). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆவல்நத்தம் ஊராட்சி சுந்தரலிங்கபுரத்தில் உள்ள தனியார் கிணற்றில் குளிக்க சென்றார். 

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உடல் நேற்று கிணற்றில் மிதந்தது. இதை பார்த்த கிராம மக்கள் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சுடலைமணி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×