என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்16 April 2021 11:07 AM GMT (Updated: 16 April 2021 11:07 AM GMT)
பாளை அருகே 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை அருகே உள்ள ஆரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (வயது 31). இவர்களுக்கு அபிஷா (8), சிபிஷா (6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இளவரசி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கும் செல்லவில்லை, உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து மனோகரன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியையும், 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பாளை கே.டி.சி. நகரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் பச்சம்மாள். இவரது மகள் சூரிய பிரியா (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற சூரிய பிரியா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தகவல்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் மகேஸ்வரி பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரியாவை தேடி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள ஆரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (வயது 31). இவர்களுக்கு அபிஷா (8), சிபிஷா (6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இளவரசி தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கும் செல்லவில்லை, உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து மனோகரன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசியையும், 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பாளை கே.டி.சி. நகரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் பச்சம்மாள். இவரது மகள் சூரிய பிரியா (வயது 21). இவர் பாளையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற சூரிய பிரியா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தகவல்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் மகேஸ்வரி பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரியாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X