என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வை 16,479 மாணவர்கள் எழுதினர்
Byமாலை மலர்16 April 2021 10:17 AM GMT (Updated: 16 April 2021 10:17 AM GMT)
கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.
கோவை:
தமிழக பள்ளி, கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் மே 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 356 பள்ளிகளில் 236 மையங்களில் நடைபெற்ற செய்முறை தேர்வினை 16 ஆயிரத்து 479 மாணவர்கள் எழுதினர். முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் நுழைவு வாயில் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைக்கின்றனர். முக கவசம் அணிந்தே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், இன்று மாவட்டத்தில் முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 479 பேரும் 2-வது கட்டமாக வருகிற 21-ந் தேதி 14 ஆயிரத்து 473 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 952 மாணவர்கள் செய்முறை தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது என்றார்.
தமிழக பள்ளி, கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-2 தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் மே 5-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 356 பள்ளிகளில் 236 மையங்களில் நடைபெற்ற செய்முறை தேர்வினை 16 ஆயிரத்து 479 மாணவர்கள் எழுதினர். முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் நுழைவு வாயில் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வைக்கின்றனர். முக கவசம் அணிந்தே மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், இன்று மாவட்டத்தில் முதல் கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 479 பேரும் 2-வது கட்டமாக வருகிற 21-ந் தேதி 14 ஆயிரத்து 473 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 952 மாணவர்கள் செய்முறை தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X