search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    களக்காட்டில் வங்கி ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா

    புலியூர்குறிச்சி பஞ்சாயத்து சுகாதார ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வடக்கு சாலைப்புதூரில் 22 வயது இளைஞருக்கும், சுப்பிரமணியபுரத்தில் 62 வயது ஆணுக்கும், காடுவெட்டியில் 21 வயது இளைஞருக்கும், 57 வயது ஆணுக்கும், திருக்குறுங்குடி மேலரதவீதில் 66 வயது ஆணுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    இதுபோல டோனாவூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் நெல்லையை சேர்ந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இவர் தேர்தல் பணிக்கு சென்று வந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதனைதொடர்ந்து புலியூர்குறிச்சி பஞ்சாயத்து சுகாதார ஊழியர்கள் வங்கியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×