search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முத்துப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தல்: போலீசார் விசாரணை

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்றதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் செய்தார். அதில் தனது மகளை திருமண ஆசை வார்த்தைகள் கூறி ஜெயக்குமார் கடத்தி சென்று விட்டார். அவரிடமிருந்து எனது மகளை மீட்டு தாருங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×