என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சகோதரருக்கு தொற்று உறுதி: கொரோனா பரிசோதனைக்கு பயந்து மூதாட்டி தீக்குளிப்பு
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள கீழநத்தத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது 74).
இவரது சகோதரர் கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி தம்பி வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவரது தம்பிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி ஆனது. இதனைத்தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் தங்கி இருந்த கோமதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர்.
அந்த வகையில் நேற்று கோமதி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதராத்துறையினர் கூறி இருந்தனர். இதற்கு பயந்த கோமதி வீட்டில் இருந்தபோது மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உடனே தீயை அணைத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்