என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் விடிய விடிய கொட்டிய மழை
Byமாலை மலர்16 April 2021 4:03 AM GMT (Updated: 16 April 2021 4:03 AM GMT)
கொடைக்கானலில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேலும் சகதியில் சுற்றுலா வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு,குளு சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடைக்கானல் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 56.6 மில்லி மீட்டரும், பிரையண்ட் பூங்காவில் 87 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
விடிய, விடிய கொட்டி தீர்த்த பலத்த மழையால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பாறைகள், பாறாங்கற்கள் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சிதறி கிடந்தன.
இதனால் அந்த மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடைக்கானல் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழை காரணமாக அந்த இடமே சகதிக்காடாக மாறியுள்ளது. இதில் அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வாகனம் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு,குளு சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடைக்கானல் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 56.6 மில்லி மீட்டரும், பிரையண்ட் பூங்காவில் 87 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
விடிய, விடிய கொட்டி தீர்த்த பலத்த மழையால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பாறைகள், பாறாங்கற்கள் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சிதறி கிடந்தன.
இதனால் அந்த மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடைக்கானல் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழை காரணமாக அந்த இடமே சகதிக்காடாக மாறியுள்ளது. இதில் அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வாகனம் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X