என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது
Byமாலை மலர்16 April 2021 3:00 AM GMT (Updated: 16 April 2021 3:00 AM GMT)
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து போலீஸ்காரர் முருகானந்தத்தை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர், அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றார். இவர் நான்கு நாட்களாக அய்யம்பேட்டை போலீஸ் நிலைய பகுதியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம்(வயது 29) பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
பணி முடிந்ததும் இரவில் அந்த பெண் போலீஸ், அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தின் மாடியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு போலீஸ்காரர் முருகானந்தம், அந்த பெண் போலீசை அழைத்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண் போலீசிடம், போலீஸ்காரர் முருகானந்தம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் போலீஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுகுறித்து பெண் போலீஸ் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து போலீஸ்காரர் முருகானந்தத்தை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தஞ்சை ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர், அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றார். இவர் நான்கு நாட்களாக அய்யம்பேட்டை போலீஸ் நிலைய பகுதியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம்(வயது 29) பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
பணி முடிந்ததும் இரவில் அந்த பெண் போலீஸ், அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தின் மாடியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு போலீஸ்காரர் முருகானந்தம், அந்த பெண் போலீசை அழைத்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்த பெண் போலீசிடம், போலீஸ்காரர் முருகானந்தம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் போலீஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுகுறித்து பெண் போலீஸ் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து போலீஸ்காரர் முருகானந்தத்தை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X