என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது
Byமாலை மலர்15 April 2021 5:54 PM GMT (Updated: 15 April 2021 5:54 PM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு கட்டிட தொழிலாளி இறந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16,025 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 373 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் நாராயணன் நகரை சேர்ந்த 57 வயதுடைய கட்டிட தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் கடந்த 12-ந் தேதியன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார். இவரோடு சேர்த்து இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறந்த கட்டிட தொழிலாளியுடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதோடு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் ஒரே நாளில் 97 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16,025 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 373 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் நாராயணன் நகரை சேர்ந்த 57 வயதுடைய கட்டிட தொழிலாளிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் கடந்த 12-ந் தேதியன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார். இவரோடு சேர்த்து இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறந்த கட்டிட தொழிலாளியுடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதோடு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் ஒரே நாளில் 97 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X