search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவை அருகே எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம்- தந்தை தற்கொலை

    கோவை அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனையடைந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள ராக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (42). கூலித்தொழிலாளி.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அவரது காதலுக்கு தனபாலும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி தனபாலின் மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் தனபால் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தனபாலின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணத்துக்கடவு அருகே உள்ள பானப்பட்டியை சேர்ந்தவர் சிவகணேசன். இவரது மகன் சிவசிதம்பரம் (22). இவர் பேரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை காலமானார். இதனால் சிவசிதம்பரம் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றார். சிறிறு நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிவ சிதம்பரத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×