என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குளித்தலை அருகே கோர்ட்டு பெண் ஊழியரை கொன்று கள்ளக்காதலன் ‘திடீர்’ தற்கொலை
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நாகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாகவுண்டன் பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32), மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகளும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நாகனூர் கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் (30) என்ற பெண்ணுடன் ஆறுமுகத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர் கரூர் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை.
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சிவபாக்கியம் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்பட்டது. விவாகரத்து ஆன பின்னர் சிவபாக்கியத்துக்கும், ஆறு முகத்துக்கும் நெருக்கம் அதிகமானது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஆறுமுகம் கள்ளக்காதலியை நல்லாகவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு அழைத்தார். பின்னர் இருவரும் விடியற்காலை வரை பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் கள்ளக்காதலிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் அருந்தியுள்ளார். இதில் சற்று நேரத்தில் சிவபாக்கியம் வாயில் நுரை தள்ளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆனால் ஆறுமுகத்துக்கு எதுவும் ஆகவில்லை. அதை தொடர்ந்து கள்ளக்காதலியின் துப்பட்டாவை எடுத்து அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு வந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த விவசாயி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் தோகைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கிடந்த மதுபாட்டில் மற்றும் பூச்சி மருந்து பாட்டில்களை கைப்பற்றினர்.
ஆறுமுகத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், வரவு செலவு கணக்குகள் எழுதப்பட்டு இருந்தன. மேலும் எங்கள் இருவரையும் ஒரே பாடையில் வைத்து எரித்துவிடுமாறு எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் உடனே தெரியவில்லை. சிவபாக்கியம் விவாகரத்து செய்துவிட்டதால் கள்ளக்காதலனிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கலாம். அல்லது ஆறுமுகம் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்