என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலையில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்15 April 2021 9:41 AM GMT (Updated: 15 April 2021 9:41 AM GMT)
கொல்லிமலையில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லிமலை:
கொல்லிமலை அடுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சபேசன் (வயது 24). இவர் நேற்று இரவு டிப்பர் லாரியில் கொல்லிமலையில் இருந்து காரவள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக லாரி கட்டுபாட்டை இழந்து ஓடியது. செக்போஸ்ட் தடுப்புகளை உடைத்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சபேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது பற்றி தகவல் கிடைத்ததும் கொல்லிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான சபேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான சபேசனுக்கு ஆனந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கொல்லிமலை அடுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சபேசன் (வயது 24). இவர் நேற்று இரவு டிப்பர் லாரியில் கொல்லிமலையில் இருந்து காரவள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக லாரி கட்டுபாட்டை இழந்து ஓடியது. செக்போஸ்ட் தடுப்புகளை உடைத்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சபேசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது பற்றி தகவல் கிடைத்ததும் கொல்லிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான சபேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான சபேசனுக்கு ஆனந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X