search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான மணிமேகலை
    X
    கைதான மணிமேகலை

    மதுரையில் என்ஜினீயரிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.68 ஆயிரம் அபேஸ்- பெண் கைது

    மதுரை எஸ் எஸ் காலனி என்ஜினீயரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.68 ஆயிரம் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் ஆதி ஜெகநாதன் (வயது 64). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் ஆதி ஜெகநாதன் பணம் எடுப்பதற்காக அங்கு உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஒரு பெண், அவருக்கு உதவுவது போல நடித்து ஏ.டி.எம். கார்டு பின் நம்பரை தெரிந்து கொண்டார்.

    அந்த ஏ.டி.எம். கார்டில் பணம் வரவில்லை. எனவே அந்த பெண், “பக்கத்தில் ஒரு ஏ.டி.எம். சென்டர் இருக்கிறது. நீங்கள் அங்கு வாருங்கள். நான் உங்களுக்கு பணம் எடுத்து தருகிறேன்” என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய ஆதி ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.

    அதனை பெற்றுக் கொண்ட அந்த பெண் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து ஆதி ஜெகநாதன் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து ரூ. 68 ஆயிரத்து 670 எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    ஆதி ஜெகநாதன் ஏ.டி.எம். கார்டில் இருந்து அந்த பெண் விலை உயர்ந்த செல்போன் மற்றும் தங்கச்சங்கிலி ஆகியவை வாங்கியுள்ளார்.

    இதுதொடர்பாக ஆதி ஜெகநாதன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணிக்குமார் சம்பவ இடத்தில் அதிரடி விசாரணை நடத்தினார். அப்போது ஆதி ஜெகநாதனிடம் இருந்து அந்த பெண், ஏ.டி.எம். கார்டை பிடுங்கி செல்வது தெளிவாக தெரிய வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு வெளியூரில் பதுங்கியிருந்த அந்தப் பெண்ணை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், மனைவி மணிமேகலை (வயது 23) என்பது தெரியவந்தது.

    ஆதி ஜெகநாதன் ஏ.டி.எம். கார்டில் இருந்து 68 ஆயிரத்து 670 ரூபாயை திருடிச் சென்ற மணிமேகலை மீது ஏற்கனவே தேனி, உசிலம்பட்000டி அருப்புக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.

    மதுரை எஸ் எஸ் காலனி ஆதி ஜெகநாதனின் ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த பெண் குற்றவாளியை 4 மணி நேரத்தில் பிடித்த சப்இன்ஸ்பெக்டர் மணிகுமாருக்கு போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×