என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏ.சி. ரெயில் பெட்டி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி மீண்டும் ரத்து
Byமாலை மலர்15 April 2021 6:30 AM GMT (Updated: 15 April 2021 6:30 AM GMT)
ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.
ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஏ.சி. ரெயில் பெட்டிகளில் கொரோனா பரவாமல் தடுக்க குளிர்ச்சியை குறைத்து மிதமான வெப்பத்தில் இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தங்களது சொந்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. ரெயில் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
ஆனால் திடீரென்று இந்த வசதி ரத்து செய்யப்பட்டதால் அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தருவது முறையாகும். ஆனால் அது பற்றிய எந்த தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.
ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஏ.சி. ரெயில் பெட்டிகளில் கொரோனா பரவாமல் தடுக்க குளிர்ச்சியை குறைத்து மிதமான வெப்பத்தில் இயக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதுவரையில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு அளித்து வந்த படுக்கை விரிப்பு, கம்பளி, தலையணை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தங்களது சொந்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. ரெயில் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
ஆனால் திடீரென்று இந்த வசதி ரத்து செய்யப்பட்டதால் அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தருவது முறையாகும். ஆனால் அது பற்றிய எந்த தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X