என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி பெண் பலி
Byமாலை மலர்14 April 2021 10:25 PM GMT (Updated: 15 April 2021 7:24 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளதால் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தொடங்கி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் அதிகபட்சமாக நேற்று பதிவாகி இருக்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக இருக்கிறது.
திருப்பூரை சேர்ந்த 55 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலை அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 1,457 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீதியில் நடமாடும்போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளதால் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தொடங்கி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாளில் அதிகபட்சமாக நேற்று பதிவாகி இருக்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக இருக்கிறது.
திருப்பூரை சேர்ந்த 55 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி அதிகாலை அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 1,457 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீதியில் நடமாடும்போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X