search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

    வாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுபெருமாள்நகரில் வசித்து வந்தவர் முத்து (வயது 66). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் மன வேதனையில் பூச்சி மருந்து குடித்து மயங்கியுள்ளார். 

    உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×