என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்14 April 2021 4:37 PM GMT (Updated: 14 April 2021 4:37 PM GMT)
தர்மபுரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 19). டிப்ளமோ படித்த வாலிபரான இவர் அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்து வந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மகளை அருகே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்து அங்கு சென்ற தர்மராஜ் தன்னை காதலிக்குமாறு மாணவியை மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தர்மராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து தர்மராஜை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X