search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-

    வானிலை ஆய்வு மையம்

    குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×