என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆறுமுகநேரி விடுதியில் புரோக்கர் மர்ம மரணம்-போலீசார் விசாரணை
ஆறுமுகநேரி:
உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி அம்மன் புரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 42). இவர் கோயம்புத்தூரில் மளிகை கடைகளில் வேலை பார்க்க ஆட்களை அனுப்பும் புரோக்கர் தொழில் செய்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி இவர் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள ஒரு விடுதியில் வந்து தங்கி உள்ளார். நேற்று காலையில் டீ குடித்து விட்டு தனது அறைக்குள் சென்ற முருகேசன் மாலையில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் ஜெயசிங் கதவை தட்டி உள்ளார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் ஊழியர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முருகேசன் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசிங் இது குறித்து ஆறுமுகநேரி போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று முருகேசன் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச் செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசன் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்