search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

    குளித்தலை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியை சேர்ந்தவர் மாயவன் (வயது 60). கூலி தொழிலாளியான இவர், நேற்று மாலை குளித்தலையில் இருந்து தனது ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு செல்லும் வழியில் குளித்தலை - மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த டிராக்டர் மீது மொபட் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாயவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாயவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×