search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாபநாசம் அருகே வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

    பாபநாசம் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக தாய் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி மணல்மேடு தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 43), கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதா (20). இவர் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

    இந்நிலையில் இவருடைய தாயார் ஜெயந்தி குடும்ப சூழ்நிலை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டார். இதனால் மனமுடைந்த நிவேதா வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நிவேதா இறந்தார். 

    இதுகுறித்து அவருடைய தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×