search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா

    பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது. நேற்று பொள்ளாச்சி நகரப்பகுதியில் 19 பேருக்கும், தெற்கு ஒன்றியப்பகுதியில் 13 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 8 பேருக்கும், கிணத்துக்கடவு பகுதியில் 9 பேருக்கும், ஆனைமலை தாலூகா பகுதியில் 2 பேருக்கும் என ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    பொதுமக்கள் அலட்சியமே கொரோனா தொற்று பரவல் காரணமாக இருக்கிறது. வங்கிகள், கடைகள், கோவில்கள் என பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவங்கள் அணியாமலும் இருந்து வருகின்றனர்.

    Next Story
    ×