என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ஒரே நாளில் முககவசம் அணியாத 1,138 பேர் சிக்கினர்
Byமாலை மலர்13 April 2021 9:51 AM GMT (Updated: 13 April 2021 9:51 AM GMT)
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை:
சென்னையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து தினமும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 1,138 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மாஸ்க் அணியாத 892 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். கடந்த 8-ந் தேதியில் இருந்து நேற்று வரையில் 3,483 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
நேற்று 9 பேரிடமும், நேற்று முன்தினம் 3 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 120 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி போலீசார் தினமும் முக்கிய சந்திப்புகளில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து தினமும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 1,138 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மாஸ்க் அணியாத 892 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். கடந்த 8-ந் தேதியில் இருந்து நேற்று வரையில் 3,483 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
நேற்று 9 பேரிடமும், நேற்று முன்தினம் 3 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 120 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி போலீசார் தினமும் முக்கிய சந்திப்புகளில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X