search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    சென்னையில் ஒரே நாளில் முககவசம் அணியாத 1,138 பேர் சிக்கினர்

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    சென்னையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கடந்த 8-ந் தேதியில் இருந்து தினமும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 1,138 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் மாஸ்க் அணியாத 892 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். கடந்த 8-ந் தேதியில் இருந்து நேற்று வரையில் 3,483 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    நேற்று 9 பேரிடமும், நேற்று முன்தினம் 3 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 120 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதன்படி போலீசார் தினமும் முக்கிய சந்திப்புகளில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×