search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ., மகன் உள்பட 5 பேருக்கு கொரோனா

    நாகர்கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. அவருடைய மகன் உள்பட 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில் 107 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 40 முதல் 50 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குளச்சல் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மீனவர் அணி மாநில செயலாளருமான ரா.பெர்னார்டுவுக்கு (வயது 80) சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய 3-வது மகனும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளருமான தமிழ்நிதி, அவருடைய மனைவி. மகன், மகள் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதேபோல் நாகர்கோவில் பீச் ரோடு பெரிய விளை பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு ஓட்டலில் பணியாற்றிய மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    Next Story
    ×