search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    கன மழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

    நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    மழை

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.

    15-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    16-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்கள், தமிழக வட உள் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியசாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. வேடசந்தூரில் 5 செ.மீ. மழையும், குன்னூர், குடவாசல், கயத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×