search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திட்டுவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வைத்தியர் பலி

    திட்டுவிளை அருகே நடந்து சென்ற வைத்தியர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
    பூதப்பாண்டி:

    திட்டுவிளை அடுத்த நன்றிகுழி கிரசன்ட் தெருவை சேர்ந்தவர் முகமது கான் (வயது 78), வைத்தியர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முகமது கான், மகனுடன் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு முகமது கான் வீட்டில் இருந்து நன்றிகுழி சந்திப்பு பகுதிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, திட்டு விளையில் இருந்து தெரிசனங்கோப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முகமது கான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது கான் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முகமது கானின் மகன் பசைல்கான் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×