என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்12 April 2021 3:05 PM GMT (Updated: 12 April 2021 3:05 PM GMT)
சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 45 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். சிப்காட் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முதல் கட்டமாக ஒரு பெண் தொழிலாளர் உள்பட மொத்தம் 75 தொழிலாளர்கள் நேற்று கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர். இது தவிர மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கவரைப்பேட்டையில் உள்ள தெலுங்கு காலனியில் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 65 பேர் கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X