search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரேயொரு தேர்வுத் தேதி மட்டும் மாற்றம்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகலாம் என பேச்சு எழுந்தது.

    இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3-ந்தேதிக்குப்பதில் மே 31-ந்தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

    தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×