என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்12 April 2021 12:58 PM GMT (Updated: 12 April 2021 12:58 PM GMT)
கோவையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோவை:
கோவை பீளமேடு உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் வீரஜோதி (வயது 24). சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் குணசேகரன் (27). இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வீரஜோதிக்கு பெற்றோர் 15 பவுன் மற்றும் சீர்வரிசை கொடுத்தனர்.
இந்தநிலையில் வீரஜோதியின் தங்கைக்கு திருமணம் நிச்சயமானது. இதை அறிந்த குணசேகரன், தனக்கு தருவதாக கூறிய 10 பவுன் நகையை தர வேண்டும் என்று கேட்டு வீரஜோதியை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் அவர், கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகும் நகை குறித்து போனில் கேட்டு குணசேகரன் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வீரஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குணசேகரன் மீது பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X