search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உடன்குடியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - மாணவர் பலி

    உடன்குடியில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக பலியானார்.
    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு ராஜா தெருவைச் சேர்ந்தவர் பியோ. இவருடைய மகன் ராகவன் (வயது 17). இவர் அங்குள்ள பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலையில் உடன்குடியில் உள்ள தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு தனது ஊருக்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    உடன்குடி முத்துநகர் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, இறந்த ராகவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த சண்முகையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×