என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே ஓட்டல் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் திருட்டு
Byமாலை மலர்11 April 2021 9:25 PM GMT (Updated: 11 April 2021 9:25 PM GMT)
பல்லடம் அருகே ஓட்டல் பூட்டை உடைத்து ரூ.1.35 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
சிவகங்கையை சேர்ந்தவர் முருகன்(வயது30). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடு புரத்தில் கடந்த பல வருடங்களாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடித்து, ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை ஓட்டலை திறக்க வந்தபோது ஓட்டல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம், கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம், உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதே போல பக்கத்திலுள்ள செருப்பு கடை, மற்றும்டீக்கடை, ஆகியவைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அங்கு திருட்டு எதுவும் நடைபெறவில்லை.
இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடம் வந்த போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கையை சேர்ந்தவர் முருகன்(வயது30). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடு புரத்தில் கடந்த பல வருடங்களாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடித்து, ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை ஓட்டலை திறக்க வந்தபோது ஓட்டல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம், கல்லா பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம், உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதே போல பக்கத்திலுள்ள செருப்பு கடை, மற்றும்டீக்கடை, ஆகியவைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அங்கு திருட்டு எதுவும் நடைபெறவில்லை.
இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடம் வந்த போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X