search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    திருவெண்ணெய்நல்லுார் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்

    திருவெண்ணெய்நல்லுார் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டது குறித்து போலீசில் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசூர்:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அற்புதராஜ்(வயது 21). இவரும், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். 

    இதற்கிடையில் அந்த மாணவி, திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. 

    இது தொடர்பாக விசாரித்ததில் மாணவியை அற்புதராஜ் கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×