என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்11 April 2021 9:38 AM GMT (Updated: 11 April 2021 9:38 AM GMT)
கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி:
தென்காசி மாவட்டம் வெள்ளாளங்குளம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் வெங்கடேஷ்வரன் (வயது 25). இவர் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவில் உள்ள தனது சகோதரி மகேஷ்வரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து தனது தந்தை மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டார்.
கோவில்பட்டி லட்சுமி ஆலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்புசுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த வெங்கடேஷ்வரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாைளயங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X