search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மொரப்பூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

    மொரப்பூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 65).

    ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 7-ந் தேதி வெளியூருக்கு சென்றார்.

    பின்னர் நேற்று மாலை மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 30 பவுன் நகை காணவில்லை.

    கண்ணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கண்ணன் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×